ஓர் இளைஞரை காதலித்த இரு இளம் பெண்களின் குடுமி பிடி சண்டை

Update: 2024-09-20 09:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து மயிலாடுதுறையில் உள்ள நர்சிங் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு நர்சிங் பயின்று வருகிறார். இவருக்கு அண்மையில் அவரது உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனால் அந்த இளைஞருடன் பழக்கத்திலிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பிரின்டிங் ப்ரஸ்ஸில் பணியாற்றும் வேறொரு இளம் பெண்ணுக்கும், நர்சிங் மாணவிக்கும் இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு தொடர்ந்து உள்ளது. இந்நிலையில் இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்து நான்கு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வெடித்துள்ளது. இதில், பிரிண்டிங் ப்ரஸில் பணியாற்றும் இளம்பெண் நர்சிங் மாணவியை பாய்ந்து சென்று தாக்கும் காட்சியும், அதன் பின்னர் அவர் நர்சிங் மாணவியிடம் தலைமுடியை பிடிகொடுத்து அடிவாங்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த சண்டையை அப்பகுதியில் உள்ள மக்கள் தலையிட்டு விலக்கி விட்டனர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு உள்ளேயே ரவுடிகள் போன்று இந்த இரண்டு இளம்பெண்களும் மாறி மாறி தாக்கி கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News