திருமயம் தாலுகா மேல்நிலைப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மனைவி பொட்டு(70). ஒரு வாரத்துக்கு முன்பு வயலுக்கு சென்ற இவர் மீண் டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிராமத்துக்கு அருகில் உள்ள தைலமரக்காட்டில் மூதாட்டி உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கே.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமை யிலான போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.