விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2024-08-09 11:42 GMT
பள்ளிபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை அன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் கலந்து கொண்டு  147 மாணவர்களுக்கும்  கிருஷ்ணவேணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 256 முதலாம் ஆண்டு மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கினார். பின்னர் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில்  ஆவரங்காடு எம்சிசி அருகில் சுமார் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்பு கூடம் கட்டுமான பணிக்கான பூஜையில் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.இந்த  நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், திமுக நகர செயலாளர் அ.குமார், ஆணையாளர் தாமரை,நகராட்சி பொறியாளர்  ,மற்றும் அதிகாரிகள்  நகராட்சி வார்டு உறுப்பினர்கள், என பலர் திரளாக கலந்து கொண்டனர்

Similar News