புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.

Update: 2024-09-21 07:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள சத்திரப்பட்டியில் இருந்து நேற்று கரூருக்கு கரூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தை ரிப்பன் வெட்டி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படாத சூழலில், அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் இந்த பேருந்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முதன் முதலாக தங்கள் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவ- மாணவியர் ஆர்வமுடன் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி வேலுச்சாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News