மண் ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர் அருகே ஆந்திரா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மீது மண் ஏற்றி வந்த லாரி ஊத்துக்கோட்டை பகுதியில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து

Update: 2024-08-09 11:46 GMT
திருவள்ளூர் அருகே ஆந்திரா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மீது மண் ஏற்றி வந்த லாரி ஊத்துக்கோட்டை பகுதியில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து., ஆந்திரா மாநிலம் சத்தியவேடு அடுத்த சிறுவனம்புதூர் பகுதியில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வழியாக ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் அருகே மண் லாரி கிருஷ்ணா கால்வாய் மீது வந்தபோது நேற்று ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் கால்வாய் மீது வழுவழுப்பான நிலை ஏற்பட்டதால் மண் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாரியை விட்டு கீழே குதிக்காமல் லாரி உள்ளேயே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் மண் அள்ளும் நபர்கள் லாரி ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர், சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Similar News