முறையாக இயக்கப்படாத பேருந்துகளால் பள்ளி மாணவ மாணவியர்கள் அவதி

கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு பேருந்துகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் பயணிக்கும் அவலம் எம்எல்ஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

Update: 2024-08-09 12:16 GMT
கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு பேருந்துகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான நிலையில் பயணிக்கும் அவலம் எம்எல்ஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்ல கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சந்திப்புச் சாலையில் பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்ல தடம் எண் 90ஏ குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் கூட்ட நெரிசலில் சிக்கி தடம் எண் 43-ல் தொங்கிக்கொண்டு மாணவ மாணவிகள் பயணிக்கும் நிலை ஒவ்வொரு நாளும் தொடர்கிறது இதனை போக்குவரத்து துறை அமைச்சர் கவனத்திற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கல்வியாளர் டிஜே கோவிந்தராஜன் கவனம் செலுத்தி வேண்டிய பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Similar News