ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

Update: 2024-08-11 14:25 GMT
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியம் கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மேலாண்மைக் குழுக் மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்று அரசு பள்ளி மேம்பாடு வளர்ச்சி பணிகள்குறித்து பேசினார். பார்வையாளராக சிறப்பு ஆசிரியர் கலந்து கொண்டார். புதிய தலைவராக வனிதா,துணை தலைவராக மல்லிகா,சமூக ஆர்வலராக தேசிங்கு,மகளிர் சுய உதவிக் குழு சார்ந்து பிரேமா, உட்பட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு நிகழ்வாக சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. விழா நிறைவில் ஆசிரியர் ராஜலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.

Similar News