ஆலங்குடி அருகே கீழாத்துாரில் உள்ள பிரசித்திபெற்ற நாடியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டும், நன்றாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மதுஎடுப்பு திருவிழா நடந்தது.கீழாத்துார், மேலாத்துார், ஊத்தப்பட்டி,கட்ராம் பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பெண்கள் குடத்தில் நவதானியங்களை இட்டு மல்லிகை மலர்களால் அலங்கரித்து தலையில் சுமந்து பக்தி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக கீழாத்துார் நாடியம்மன் கோயிலை வந் தடைந்தனர். பின்னர், தங்கள் நிலத்தில் விளைந்த நெல்மணிகளை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.