மதுராந்தகம் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுராந்தகம் அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி சித்தாமூர் போலீசார் விசாரணை

Update: 2024-08-15 12:01 GMT
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பையம்பாடி பகுதியை சேர்ந்தவர் குமார்.. இவருடைய இரண்டாவது மகள் வினிதா வயது (26) இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் திருமணம் ஆகி கடந்த நான்கு மாதங்கள் ஆகியுள்ளது.இந்த நிலையில் ஆடி மாதம் அம்மா வீட்டுக்கு வந்த வினிதா அவரது அறையில் சென்று திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. பின்பு சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இவருக்கும் கணவருக்கும் ஏதாவது பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News