சாலை நடுவே உள்ள மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

சாலை நடுவே உள்ள மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-08-18 10:52 GMT
சாலை நடுவே உள்ள மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறும்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12 -வது வார்டு காந்திநகர் பகுதியில் சாலை நடுவே மின்கம்பம் அமைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது மட்டுமின்றி அப்பகுதிகளில் மின் வயர்கள் மிகவும் தாழ்வான நிலையில் செல்வதால் அவ்வப்பொழுது காற்றுடன் கூடிய மழை பெய்யும் பொழுது தாழ்வாக செல்லக்கூடிய ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிகளில் சென்று தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை பராமரிக்க வேண்டும் எனவும் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் புதிய கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News