குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மறியல்

Update: 2024-08-19 04:45 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி காலி குடங்களுடன் அரசு பேருந்து சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள மேட்டு தெருவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 50 மேற்பட்ட பொதுமக்கள் சங்கராபுரம், புதுப்பட்டு சாலையில் காலி குடங்களுடன் அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த ஊராட்சி செயலாளரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு முறையான குடிநீர் வினியோகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் சங்கராபுரம் புதுப்பட்டு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News