ஆவணி அவிட்ட விழா நாமக்கல் பிராம்மண சேவா சங்கம் டிரஸ்ட் சார்பில் பூணூல் மாற்றி வழிபாடு!

நாமக்கல் பிராம்மண சேவா சங்கம் டிரஸ்ட் அலுவலகத்தில் பூணூல் மாற்றும் பண்டிகை நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பிராமணா்கள் கலந்துகொண்டனா்.

Update: 2024-08-19 06:49 GMT
நாமக்கல்லில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் பண்டிகை (ஆகஸ்ட் -19) நடைபெற்றது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு ஸ்ராவண பெளா்ணமி புண்யகாலத்தில் பூணூல் உபாகா்மா பண்டிகை நடைபெற்றது. நாமக்கல் பிராம்மண சேவா சங்கம் டிரஸ்ட் அலுவலகத்தில் பூணூல் மாற்றும் பண்டிகை நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பிராமணா்கள் கலந்துகொண்டனா்.மல்லசமுத்திரம் சத்யமூர்த்தி சாஸ்திரிகள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை நடத்தினாா். மேலும், உலக நன்மைக்காக அவா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா். விழா ஏற்பாடுகளை பிராமண சேவா சங்கத் தலைவா் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, உபதலைவா் கணேசன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனா்.

Similar News