விருத்தாசலம் அருகே வடமாநில தொழிலாளி மர்ம காய்ச்சலுக்கு பலி?

போலீசார் விசாரணை

Update: 2024-09-11 18:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மேற்கு வங்காளம் மாநிலம் குமாரி கிராமத்தைச் சேர்ந்த நெருசப்பல் மகன் லாதன் (வயது 17). இவர் தன் உடன் பிறந்த அண்ணன் லம்பு (23) என்பவருடன் விழுப்புரத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு சொந்தமான போர்வெல் வண்டியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த போர்வெல் வண்டி விஜயமாநகரத்தில் விவசாயி ஒருவரின் வயலில் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதில் லாதன் வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 10 ந் தேதி அன்று லாதனுக்கு காய்ச்சல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்துள்ளனர். அங்கு சரியாகாததால், இன்று 11ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் மர்ம காய்ச்சலால் லாதன் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காய்ச்சல் அடித்த நிலையில் வடமாநில தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News