தெடாவூர் பேரூராட்சியில் மரகத பூஞ்சோலை திறக்கப்பட்டது

பூஞ்சோலை

Update: 2024-08-19 15:50 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ளதெடாவூர் பேரூராட்சியில் வனத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மரகத பூஞ்சோலையை காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மரகத பூஞ்சோலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கெங்கவல்லி ஒன்றிய குழு தலைவர் கோமதி, வனச்சரக அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மரகத பூஞ்சோலையில் 63 வகையான 625 மர தாவரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News