ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஈரோடு எம்பி நன்றி தெரிவிப்பு

பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

Update: 2024-08-21 16:26 GMT
31 கிராமங்களுக்கு சென்ற ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றிய பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் நேற்று நன்றி அறிவிப்பு பயணத்தை மேற்கொண்டார். அப்போது நேற்று காலை 8 மணி அளவில் வரப் பாளையம் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் அவர்களுக்கு உற்சாகமாக திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்ப்பளித்தனர். திமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,மாநகராட்சி 4 வது மண்டல குழு தலைவர் ஆன இல.பத்மநாபன் தலைமையில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான எஸ்.வி. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இதில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில் நமது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தருவார்.அதேபோல் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும்,நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவார் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் பேசுகையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேர்தலின் போது ஓட்டு கேட்பதற்காக வந்தபோது எவ்வளவு உற்சாகமாக எனக்கு வரவேற்பு அளித்து வாக்களித்தீர்களோ அதே போல் நன்றி தெரிவிக்க வரும்போதும் அதே உற்சாகத்துடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலை விட தற்போது 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். இதேபோல் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் குறைந்தபட்சம் தாராபுரம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார். அதைத் தொடர்ந்து எனக்கு வாக்களித்த அனைத்து சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என உரையை முடித்தார். இதைத் தொடர்ந்து வரபாளையம், குப்பிச்சிபாளையம், வீராச்சிமங்கலம் உள்ளிட்ட 31 கிராமங்களில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு மற்றும் திமுக முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News