மூலனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மனுக்களை பெற்றுக்கொண்ட

Update: 2024-08-21 16:35 GMT
மூலனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டை மருதூர், குமாரபாளையம், வேலாம் பூண்டி, புஞ்சை தலையூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மூலனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது. "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாநகராட்சி 4. வது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் நான்கு ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் 16 துறைகளைச் சேர்ந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்தி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான பழனிச்சாமி, மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, புஞ்சை தலையூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவராமசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News