அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுமைய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Update: 2024-08-21 16:36 GMT
தாராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுமைய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தாராபுரம் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டிகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சார்பில் கூடைப்பந்து போட்டிகளை மூலனூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி எடுத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரரும் ,தாராபுரம் கூடைப்பந்து கழகத்தின் தலைவருமான ரத்ன சபாபதி கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியை தொடக்கி வைத்தார். இப் போட்டியில் தாராபுரம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு குறுமைய அளவில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்கள் சார்பில் 3 அணிகளும், மாணவிகள் சார்பில் 4 அணிகளும், 17 வயதுக்குட்போருக்கான மாணவர்கள் சார்பில் 5 அணிகளும் மாணவிகள் சார்பில் 4 அணிகளும், 19 வயதுக்குட்பட்ட ஒரு கான மாணவர்கள் சார்பில் 2 அணிகளும் மாணவிகள் சார்பில் 2 அணிகளும் என மொத்தம் 20 அணிகள் பங்கு பெற்றது. இ போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது போட்டிகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த குறுமைய செயலர் மற்றும் குறுமைய இணை செயலாளர்கள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினர்.

Similar News