அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்று வழங்கினார்

Update: 2024-08-21 17:02 GMT
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் செம்பனார்கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புக சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் இதில் சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 61 மாணவிகளுக்கும் செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 170 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக் ,அமிர்த விஜயகுமார், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

Similar News