தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவாரணம்

தரங்கம்பாடி அருகே தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் எம்.எல்.ஏ .நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல்

Update: 2024-08-23 09:55 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் மாணிக்க பங்கு ஊராட்சி தெற்கு தெருவில் வசிக்கும் வரலட்சுமி என்பவர் கணவனை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா, தீபிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களின் ஏழ்மை நிலையில் மகள்கள் இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் பட்டுப் புடவைகள் நகை திருமணத்திற்கு வைத்திருந்த பொருட்கள் என அனைத்தும் எரிந்து சேதமடைந்தது இந்நிலையில் தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் அமுர்தவிஜயகுமார், அப்துல் மாலிக், மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News