திமுக பிரமுகர் இல்ல விழாவில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நேரில் வாழ்த்தினார்

அரசியல்

Update: 2024-08-25 09:06 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி சுப்புலாபுரம் என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் சரவணன். இவர் ஆண்டிபட்டி பேரூர் திமுக செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இவருடைய இல்ல விழாவில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் நேரடியாக சென்று வாழ்த்தினார் இதுபோல் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜாராம் . தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வகுமார் ,ஆண்டிபட்டி நகர பேரமைப்பு தலைவர் பாண்டியராஜன் ,பொருளாளர் நாகராஜன் ,இணைச் செயலாளர் சோலை ராஜ் ,மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் நேரில் சென்று வாழ்த்தினார்கள்

Similar News