உடுமலையில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்

பட்டாசுகள் வெடித்தும் அன்னதானம் வழங்கியும் கொண்டாட்டம்

Update: 2024-08-25 17:07 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை .திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுச்சாமி கேக் வெட்டி தொடக்கி வைத்தார். மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் கிரி பொதுக்குழு உறுப்பினர், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை நகரம் , உடுமலை ஒன்றியம் , குடிமங்கலம் பகுதியில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் உடுமலை பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் உடுமலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா கருணாகரன் மதிய உணவு வழங்கினார். அத்துடன் குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் பெருமாள்,துணை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்னதானம் வழங்கினார்கள். நிகழ்விற்கான ஏற்பாடுகளை உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், நகர பொருளாளர் தென்றல் யூசுப்,உடுமலை ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ், குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் பெருமாள் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா,எரிசனம்பட்டி மாரிமுத்து,ஒன்றிய,நகர,பேரூர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்வின் நிறைவாக நகர அவைதலைவர் ராஜேந்திரன் ,ரவி நன்றி தெரிவித்தார்.

Similar News