மர்தானி தற்காப்பு கலை பொதுக்குழு கூட்டம்.

ஆரணி.ஆக. 26- சேத்துப்பட்டுதனியார் திருமண மண்டபத்தில் மர்தானி தற்காப்பு கலையின் மாநில அளவிலான பயிற்சியாளர் முகாம் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-08-25 17:41 GMT
சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மர்தானி தற்காப்பு கலையின் மாநில அளவிலான பயிற்சியாளர் முகாம் மற்றும் பொதுக்குழு கூட்டம் மர்தானி விளையாட்டு சங்கம் சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மர்தானி விளையாட்டு சங்க மாநில தலைவர் மாஸ்டர் கமலேஸ்வரன் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் தனசேகரன் வரவேற்றார். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாவட்ட பயிற்சியாளர்களுக்கு பொருளாளர் பூவராகவன் மரியாதை செலுத்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி மாநில மர்தானி விளையாட்டு சங்க தலைவர் மாஸ்டர் ஞானசேகரன் தற்காப்பு கலைகள் குறித்து பேசினார். பின்னர் முகாமில் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மர்தானி விளையாட்டு சங்க மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் இணை செயலாளர் ரகுநாத் நன்றி கூறினார்.

Similar News