மதுரை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

30 க்கும்மேற்பட்ட கிராமங்களில் யாதவர் குல கொடியேற்றி கொண்டாடினர்

Update: 2024-08-27 15:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட யாதவர் கல்லூரி பொறியாளர் நகர் கிருஷ்ணா நகர் பூதகுடி பூலட்சுமிபுரம் அய்யனார்புரம் வீரபாண்டி ஊமச்சிகுளம் கூளப்பாண்டி மந்திகுளம் சத்திரப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொடியேற்றி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கூளப்பாண்டி ஊராட்சியில் கோகுலம் பாய்ஸ் யாதவர் சமூகத்தினர் சார்பாக பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பளித்து கிருஷ்ண ஜெயந்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யாதவர் கல்லூரி முன்னாள் தாளாளர் செயலாளரும் தொழிலதிபருமான கே பி எஸ் கண்ணன் ஆர்.வி. என் கண்ணன் கல்லூரி தலைவரும் அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளருமான ஜெயராமன் துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன் இணைச் செயலாளரும் முத்துகிருஷ்ணன் என்ற கிட்டு பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் சேகர் செந்தில் பாலகிருஷ்ணன் கோபால் உள்பட ஏராளமான பங்கேற்றனர் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த குழுவினர்க்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Similar News