சேலத்தில் பிரசவத்தின் போது தாயும் குழந்தையும் பலி

போலீசார் விசாரணை

Update: 2024-08-29 03:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சம்போசிங் இவரது மனைவி பழசஞ்சீவ்தேவி இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் வசித்தனர். கர்ப்பிணியான சஞ்சீவ்தேவிக்கு, கடந்த, 27ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டு மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் குழந்தை வயிற்றிலேயே இறந்த நிலையில் இருப்பது தெரிந்தது. இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். பின் தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில் அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. இதில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News