மழையூரில் மணல் கடத்தியவர் கைது!

குற்றச்செய்திகள்

Update: 2024-08-29 04:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மழையூர் பகுதியில் மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் மஞ்சள் கரை அக்கினி ஆறு அருகே மகேந்திரா பொலிரோ பிக் அப் வாகனத்தில் ஒரு யூனிட் மணல் இருந்ததை கண்டறிந்தனர். பின்னர், இது தொடர்பாக மழையூரை சேர்ந்த ஜெகதீஷ் குமார் என்பவரை கைது செய்தனர். வண்டி உரிமையாளர் வீரமணி தலைமறைவானார்.

Similar News