கனவு இல்லம் திட்டம் வீடு கட்ட பணி ஆணை

ஆணை

Update: 2024-09-22 04:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 315 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., ரவிசங்கர் வரவேற்றார்.நிகழ்ச்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளில் வீடு கட்டுவதற்காக முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 315 பயனாளிகளுக்கு 11.2 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஒன்றிய அவைத் தலைவர் தங்கவேல், ஒன்றிய நிர்வாகிகள் சோலைமுத்து, சக்திவேல், கண்ரோஸ், தமிழ்செல்வி கோவிந்தன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News