மாநில அளவிலான பேட்மிண்டன் 2ஆம் நாள் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள்

மயிலாடுதுறையில் 13 வயது உட்பட்டோருக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி; இரண்டாவது நாளில் 144 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்

Update: 2024-09-22 04:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்ட இறகு பந்தாட்டக் கழகம் சார்பில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி நேற்று தொடங்கி வரும் 24-ஆம் தேதி வரை 5 நாள் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த போட்டி முதன்முறையாக நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை யூனியன் கிளப் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடைபெறும் போட்டிகளில் 13 வயதிற்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆண்கள்  ஒன்றையர், இரட்டையர், மகளிர் ஒன்றையர், இரட்டையர் ஆகிய நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் 224 அணிகள் விளையாடிய நிலையில் இன்று 144 அணிகள் விளையாடி உள்ளனர். நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இறுதி கட்டப் போட்டிகள் நடைபெற உள்ளது.

Similar News