வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் கைது

வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் கைது

Update: 2024-09-22 04:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 70 வயது முதியவர் கைது !பாதிக்கப்பட்ட மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த சின்னகண்ணு என்ற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில்,பள்ளி மாணவியை அவரது பெற்றோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையிற்காக கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவியின் பெற்றோர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் சின்னகண்ணுவை வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Similar News