குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையை துவக்கி வைத்தார்

Update: 2024-08-29 06:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் புதிய கழிப்பிடங்கள், சிமெண்ட் சாலைகள், குளம் புனரமைப்பு மற்றும் வளம் மீட்பு மையம் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமை வகித்தார். எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் நந்தகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் கணேசன், திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, மாவட்ட பிரதிநிதி ஜாபருல்லா, வழக்கறிஞர் சாகுல் ஹமீது, நகர துணை செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், ஒப்பந்ததாரர் லயன் ராஜா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், உடனிருந்தனர்

Similar News