பேக்கரி மாஸ்டர் வீட்டின் முன்பு நிறுத்திய டிவிஎஸ் எக்ஸ்எல் திருட்டு

லாலாபேட்டை போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிந்து விசாரணை

Update: 2024-08-30 04:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (36). இவர் ஐயர்மலையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகின்றார் இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று தனது டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டில் உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த ரூ.30000 மதிப்புள்ள டிவிஎஸ் XL காணவில்லை. புகாரின் பேரில் அதைப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News