டீக்கடையில் உள்ள பருப்பு வடையில் எலி கிடந்ததால் பரபரப்பு

பலகாரப் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி நிர்வாகம்

Update: 2024-08-30 10:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை மற்றும் பலகார கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி (33) என்பவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். மதியம் 12 மணி அளவில் ஒரு போண்டா, ஒரு பருப்பு வடை வாங்கி உள்ளார் . அதில் பருப்பு வடை பாதி சாப்பிட்டு விட்டு பார்க்கையில் உள்ளே எலி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இதுகுறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது அது ஒன்றும் செய்யாது சிறிய எலிதான் என்று கூறியுள்ளார் கோபமடைந்த கார்த்தி உரிமையாளர் பாபுவிடம் முறையிட்ட போது கண்டும் காணாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது, உடனே சமூக வலைதளத்தில் இச்சம்பவம் குறித்து பரப்பியதை அடுத்து குளித்தலை போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அந்த கடையின் பொருட்களை கைப்பற்றி கடைக்கு சீல் வைத்தனர். பாதிக்கப்பட்ட கார்த்திக் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் கடையில் உள்ள பலகாரத்திற்கு உபயோகப்படும் பொருட்களை ஆய்வு செய்தார். பிறகு 7 நாட்களுக்கு கடையை திறக்க கூடாது என கடை உரிமையாளரிடம் கூறி கடையை மூட உத்தரவிட்டார். பருப்பு வடையில் எலி கடந்த சம்பவத்தைத் தொடர்ந்து குளித்தலையில் உள்ள பலகாரம் சாப்பிடும் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Similar News