தாளியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

தேர்ந்தெடுக்கப்பட்ட 24 உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

Update: 2024-08-31 13:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு மனோகரன் அறிவியல் பட்டதாரி தலைமை வகித்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர், முன்னாள் மாணவர்களின் பெற்றோர் உறுப்பினர், முன்னாள் மாணவர் உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News