மதுரை இ.பி.ஜி பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா!*

மதுரை இ.பி.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 39 -வது தேசிய விளையாட்டு தின விழா நடைபெற்றது.

Update: 2024-09-01 02:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை இ.பி.ஜி பள்ளியில் தேசிய விளையாட்டு தின விழா! மதுரை இ.பி.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 39 -வது தேசிய விளையாட்டு தின விழா நடைபெற்றது. மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான ஆக. 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கடைப்பிடிக்கப் பட்டுவருவதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆசிரியர் தனராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நாகர்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளி டாக்டர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் கலந்து கொண்டார். மேலும், சிறப்பு கௌரவ விருந்தினராக டி நோபிலி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியின் முதல்வரும் தாளாளருமான அடைக்கல ராஜா மற்றும் தாளாளர் லுசிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செடிகள், மூங்கில் மரங்கள் போன்ற பல்வேறு பசுமை மரங்கள் வளர்ப்பது குறித்து, விழிப்புணர்வாக ஆடல் பாடல்களுடன் ஏற்பாடுகள் செய்திருந்தனர். மேலும், சிறுவர்களுக்கான ஆடல் பாடல், தண்ணீர் நிரப்பும் போட்டி, கராத்தே, சிலம்ப போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், இ.பி.ஜி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News