சைக்கிளில் சென்ற நபரிடம் அறிவாலை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு

Update: 2024-09-01 06:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பாலபட்டியைச் சேர்ந்தவர் தண்டபாணி (32). டெக்ஸ் வேலை செய்து வரும் இவர் நேற்று மகாதானபுரத்திற்கு சொந்த வேலையாக செல்வதற்காக தனது சைக்கிளில் மகிளிபட்டி இரட்டை வாய்க்கால் கரையில் சென்றுள்ளார். அப்போது மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் அறிவாலை காண்பித்து பணம் கேட்டு சட்டை பையில் இருந்த ரூ.1000 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து தண்டபாணி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் இன்று வழக்கு பதிவு.

Similar News