வெப்படை நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-09-01 11:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம்  வெப்படை பகுதியில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்,தனியார் நிதி நிறுவனங்கள்  தொடர்ந்து அத்துமீறி சட்டத்திற்கு புறம்பாக பொதுமக்களிடம்  கடன் வசூல் செய்வதை கட்டுப்படுத்திட கோரியும்,கந்து வட்டி சட்டத்தை முறையாக அமுல்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க கோரியும், வெப்படை அடுத்துள்ள  கல்லாங்காட்டுவலசு பகுதி மேட்டுகடையில் கே.வினோத்குமார் என்பவரை தான் வாங்கிய கடனுக்காக தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து தற்கொலைக்கு தூண்டிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திட கோரியும், வெப்படை நால் ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பள்ளிபாளையம்  வடக்கு ஒன்றியம் சார்பில்  கட்சி நிர்வாகி.தனேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை அன்று  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் பி.பெருமாள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சி.துரைசாமி, ஒன்றிய குழு செயலாளர் தோழர் எஸ்.சந்திரமதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர் M.தனேந்திரன், ஜி சேகர், மு.மணிகண்டன் வி.சண்முகம், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் தோழர் R.ராஜதேவ் உள்ளிட்ட கட்சி தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். ‌

Similar News