அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணர்வு

விழிப்புணர்வு

Update: 2024-09-01 19:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி டீன் நேரு தலைமை தாங்கினார். நிலைய மருத்துவர் முத்துக்குமார், மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சக்திவேல், சிறப்பு நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது. மின் கசிவால் ஏற்படும் தீ விபத்து மற்றும் காஸ் சிலிண்டர் மூலம் ஏற்படும் தீ விபத்தினை தடுப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News