பணிக்கம்பட்டி சாலையில் நடந்து சென்ற நபர் மீது பைக் மோதிய விபத்து

இரண்டு பேர் படுகாயம், குளித்தலை போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-09-02 04:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்புரெட்டிபட்டியை சேர்ந்தவர் சிங்காரம் (59). இவர் நேற்று முன்தினம் பணிக்கம்பட்டி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வளையபட்டியைச் சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் சிங்காரம் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். சிங்காரம் மகன் கலைக்கோவன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு.

Similar News