நிலத்தகராறில் இரு தரப்பினர் இடையே தகராறு

இருதரப்பை சேர்ந்த 4 பேர் மீது லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-09-03 05:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பொய்கைபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேம்புசாமி மற்றும் சுந்தரமூர்த்தி இவர்களுக்கிடையே கடந்த மாதம் 31ஆம் தேதி காலி இடத்தில் உரிமை கோருவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது குறித்து இருதரப்பிலும் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் சுந்தரமூர்த்தி, வேம்புசாமி, சித்ரா, சின்னத்தம்பி ஆகிய 4 பேர் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை.

Similar News