மது போதை ஆபாசம் ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியின் மாபெரும் பரப்புரை.

Update: 2024-09-03 12:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
- மது போதை ஆபாசம் தவறான உறவுகள் என பெருகும் தீமைகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் 30 வரை ஒழுக்கமே சுதந்திரம் என்னும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்துள்ளது. மது மற்றும் போதை பழக்கம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது. குடிக்கு அடிமையானவர்கள் அதிகம் வாழும் நாடாக நமது நாடு மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆண் பெண் வேறுபாடு இன்றி மது அருந்துகின்றனர். இதனால் சமூகத்தில் தீமைகள் பெருகிவிட்டன நோய்கள் அதிகரித்துவிட்டன. விபத்து கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வு என அனைத்து தீமைகளுக்கும் தாயாக மது இருக்கிறது.வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துவதுதான் இபாதை நாட்டையே நாசப்படுத்தி விடும் என்பதால் போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஆடாலின் முன்னெடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் தமிழக அரசு கலஸ்ட் 11ஆம் நாளை போதைக்கு எதிரான நாளாக அறிவித்து பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய முயற்சி அதே வேளையில் மதுவை தடை செய்யாமல் போதை இல்லா பாதை சாத்தியம் இல்லை என்பதே உணர்ந்து தமிழக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்று பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்தியாவின் மகள்கள் தொடர்ந்து சீரழிக்கப்படுகிறார்கள் டெல்லியில் 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை அடுத்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்பட்டன ஆனாலும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துக்கொண்டேயுள்ளது. இந்தியாவில் தினம் 90 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதாகவும், ஆண்டுதோறும் 32,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு ஆவதாக ஒன்றிய அரசின் NCRB தெரிவித்திருக்கிறது.ஹத்ராஸ் பட்டியலினப்பெண் கூட்டு வன்கொடுமைக்கொலை, உண்ணாவில் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமைக்கொலை, கத்துவாலில் 8 வயது ஆசியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலை, இப்போது கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வு என இக்கொடூரங்கள் படுகொலை தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் குற்றவாளிகள் தப்பி விடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கானல் நீராகவே இருக்கிறது.சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் சமூகத்தில் சிந்தனை மாற்றமும் இறை அச்சமும்தான் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்பாவை. ஒரு பால் உறவு, கள்ள உறவுகள், திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்தல் போன்ற இழி செயல்கள் இன்று பெருகி வருகின்றன. இது வருங்கால தலைமுறையையே நாசப்படுத்தி விடும் இந்த கேடுகெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். மது போதை ஆபாசம் ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முன்னெடுத்து இருக்கும் இந்த பரப்புரையை முன்னிட்டு அரங்க கூட்டங்கள். பொதுக்கூட்டங்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நிகழ்வுகள் சமூக வலைதளங்கள் விழிப்புணர்வு என செப்டம்பர் மாதம் முழுவதும் பல விழிப்பணர்வு நிகழ்வுகளை நடத்த உள்ளோம் இது முஸ்லிம்களுக்கான முஸ்லிம் பெண்களுக்கான பரப்புரை அல்ல மாறாக ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவான விழிப்புணர்வு பரப்பரை அனைவரும் இந்த நல்ல நோக்கத்திற்காக ஒன்றிணைவோம் ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம் கலந்து கொண்டவர்கள் திருமதி ஜரினா யூசுப் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் மதுரை. திருமதி நூர்மஜியா ஒருங்கிணைப்பாளர் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை மதுரை திருமதி ஆரிஃபா ராணி பரப்புரை துணை ஒருங்கிணைப்பாளர் திரு என் பஷீர் அகமத் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை தலைவர் திரு சையது உசேன் சாலிடாரிட்டி மாநிலச் செயலாளர்

Similar News