கோபியில் தள்ளு வண்டிக்கு நள்ளிரவில் தீ வைப்பு. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பின்னிங் மில் தப்பியது.

கோபியில் தள்ளு வண்டிக்கு நள்ளிரவில் தீ வைப்பு. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பின்னிங் மில் தப்பியது.

Update: 2024-09-05 03:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோபியில் தள்ளு வண்டிக்கு நள்ளிரவில் தீ வைப்பு. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பின்னிங் மில் தப்பியது. கோபி அருகே உள்ள ல.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் அலங்காரன் மனைவி அலமேலு(50). இவர் தள்ளு வண்டியில் பழங்கள் விற்பனை செய்து வருகிறார். இவருடன் இவரது தம்பி நாராயணனும் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் கோபியில் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு இடங்களில் கோயில் திருவிழாக்களிலும் தள்ளு வண்டியில் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். வழக்கமாக விற்பனை முடிந்த பிறகு கோபி நாகர்பாளையம் சாலையில், இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள தனியார் ஸ்பின்னங் மில் வளாகத்தில் தள்ளு வண்டிகளை நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று இரவும் அதே போன்று தர்பூசணி பழங்களுடன் தள்ளு வண்டியை நிறுத்தி விட்டு அலமேலுவும், நாராயணனும் வீட்டிற்கு சென்று விட்டனர். ஸ்பின்னங் மில் இரண்டு ஆண்டுகளாக இயங்காத நிலையில் இரவில் யாரும் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தள்ளு வண்டிகளுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். தீ மளமளவென பரவி மரத்தாலான தள்ளு வண்டி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய முன்னனி தீயணைப்பு வீரர்கள் முருகன், கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திர மூர்த்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினர். தீ வைக்கப்பட்ட இரு தள்ளு வண்டிகளும் ஸ்பின்னிங் மில் கதவு அருகிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் உரிய நேரத்தில் தீ அமைக்கப்பட்டதால் ஸ்பின்னிங் மில்லில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் இருந்து தப்பியது. அதே போன்று ஸ்பின்னிங் மில் அருகிலேயே ஏராளமான குடியிருப்பிகள் உள்ளது. மில்லில் தீப்பற்றி இருந்தால் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும். தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. முன் விரோதம் காரணமாக தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு தள்ளு வண்டிகள், பழங்கள் முழுமையாக எரிந்து சேதமானது.

Similar News