பைக் மீது பொலிரோ பிக் அப் வாகனம் மோதிய விபத்து

தோகைமலை போலீசார் வழக்கு பதிவு

Update: 2024-09-05 13:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா நாச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (39). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் தோகைமலை பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மதுரை மாவட்டம் கருப்பாயி ஊரணியைச் சேர்ந்த அருண்பாண்டியன் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வாகனம் மோதியதில் ரவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தோகைமலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

Similar News