கருத்தரிக்காப்பட்டியில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பெண் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.

கருத்தரிக்காப்பட்டியில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பெண் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை.

Update: 2024-09-06 04:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கருத்தரிக்காப்பட்டியில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பெண் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம் , கடவூர் தாலுக்கா, கருத்தரிக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பெரியக்காள் வயது 53. இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு கடந்த மூன்று வருடங்களாக செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால், விரத்தி மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்த பெரியக்காள் செப்டம்பர் 3-ம் தேதி காலை 7:30- மணி அளவில்,அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மகன் பெருமாள் வயது 37 என்பவர், தனது தாயாரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெருமாள் காவல் துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த பெரிய்காள் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Similar News