முதல் நாளிலே காவிரி ஆற்றில் கரைந்த விநாயகர்...

சங்ககிரி:கல்டங்கம் காவிரி ஆற்றில் 85க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்த பக்தர்கள்....

Update: 2024-09-07 16:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் 85க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் கலைத்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனையடுத்து சனிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரை கரைத்து வருகின்றனர். அதனையடுத்து சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, அரியானூர், வீரபாண்டி, தாரமங்கலம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 85க்கும் மேற்பட்ட பக்தர்கள், அவரவர் ஊர்களில் வழிபட்ட விநாயகர் சிலைகளை மினி டெம்போ, வேன்களில் எடுத்து வந்து கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பூஜைகள் செய்த பின்னர் ஆற்றில் கரைத்து சென்றனர்.

Similar News