திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-09-10 13:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில உரிமையை காப்போம் !கல்வி உரிமையை மீட்போம் என்ற தலைப்பில், கல்வியில் நமது தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. ஆனால் இன்றைய பாஜக ஒன்றிய அரசு தொடர்ந்து கல்வி கட்டமைப்பை சீர்க்குலைக்க  முயற்சி செய்து வருகிறது.  ஏன் இது போன்ற செயல்பாடுகள் நடக்கிறது? இதில் பிஜேபியின் திட்டம் என்ன!? கல்வியில் எப்படி வகுப்புவாத அரசியலை புகுத்த முயல்கிறது என்பது குறித்த பல்வேறு விவரங்களை எடுத்துரைத்து நிகழ்வில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகம் நிர்வாகிகள் பேசினர் . மேலும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.அசோகன், ஆதி தமிழர்  பேரவை, செல்வவில்லாளன் புரட்சிகர இளைஞர் முண்ணனி மாணிக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் சரவணன்,மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள்  திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்..

Similar News