விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் இலுப்பூர் பகுதியில் வசித்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிக்காக தனது இல்லத்தில் இருந்து கரையபட்டி வழியாக வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பள்ளி சிறுவர் சிறுமிகளை கண்டு நல்லா படிக்கிறீங்களா? நலம் விசாரித்து சாக்லேட் வழங்கி தனது வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்