உப்பிடமங்கலத்தில்திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

உப்பிடமங்கலத்தில்திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-13 02:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உப்பிடமங்கலத்தில்திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், தாந்தோணி கிழக்கு ஒன்றியம், பேரூர் கழகம் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் உப்பிடமங்கலம் பேரூர் கழக அவை தலைவர் கேசவன் தலைமையில் நேற்று இரவு உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உப்பிடமங்கலம் பேரூர் கழக செயலாளர் சி பி டி தங்கராஜ், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், பேரூர் கழக துணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் கழக, வார்டு கழக நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி சிறப்புரையாற்றினார். தற்போது,திமுக கட்சி துவங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பவளவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து விளக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் 200- தொகுதிகளை கைப்பற்றும் அளவுக்கு தொண்டர்களின் களப்பணி சிறப்பாக அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News