காந்திகிராமத்தில் கரூர் மாநகர தெற்கு பகுதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காந்திகிராமத்தில் கரூர் மாநகர தெற்கு பகுதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-13 09:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காந்திகிராமத்தில் கரூர் மாநகர தெற்கு பகுதி திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக கட்சி துவங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு கட்சியின் பவள விழா ஆண்டு விழாவை கொண்டாட கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர், காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் கரூர் மாநகர தெற்கு பகுதி செயலாளர் சுப்பிரமணி ** தலைமையில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, கட்சியின் நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன், திமுக மாவட்ட பொருளாளர் கருணாநிதி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், கோல்டு ஸ்பாட் ராஜா உள்ளிட்ட கரூர் மாநகர தெற்கு பகுதி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி சிறப்பு உரையாற்றினார். அப்போது, கட்சி தலைமை அறிவித்தபடி வரும் சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு கட்சியின் செயல் திட்டங்களையும், திமுக திராவிட மாடல் சாதனைகளை விளக்கி கூறி கட்சியை பலப்படுத்த வேண்டும் என கட்சியினரை கேட்டுக் கொண்டார்.

Similar News