மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் கைது

சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்

Update: 2024-09-18 01:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மந்திக்கண்மாயை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (56). அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் மைக்கேல்ராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News