பல வருடங்களாக சாலையை சீரமைக்காத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.

பல வருடங்களாக சாலையை சீரமைக்காத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.

Update: 2024-09-14 07:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல வருடங்களாக சாலையை சீரமைக்காத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா தென்னிலை- கார்வழி சாலை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை சீரமைக்காமல் உள்ளது. இந்த சாலை தற்போது முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பகுதி வாழ் மக்கள் பலமுறை கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகம் ஆகியவர்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சாலையை விரைவில் சீரமைக்க கோரி தென்னிலை கார்வழி பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள்2-வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News