இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம்

இன்ஸ்டாகிராமில் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி வேடசந்தூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

Update: 2024-09-14 19:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஐயர் மடத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 21. இவர் தனியார் நூற்பாலையில் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி சிவரஞ்சனி வயது 19 என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கமானது காலப்போக்கில் காதலாக மாறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நேரில் பார்க்காமல் இன்ஸ்டாகிராமில் காதல் செய்துள்ளனர். இந்த நிலையில் கார்த்திகேயனை பார்ப்பதற்காக சிவரஞ்சனி வேடசந்தூர் வந்துள்ளார். அப்போது இருவரும் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் நிலையத்திற்கு வந்த இரு வீட்டாரும் இந்த காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெறிக்காமல் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீசார் சிவரஞ்சனையை மாப்பிள்ளை வீட்டார் உடன் அனுப்பி வைத்தனர்.

Similar News